Friday, September 30, 2011

ஆதி சங்கரர் ஆன்மிக சிந்தனைகள்

பக்திவேறு, கர்மம் வேறு அல்ல; கர்மம் வேறு, ஞானம் வேறு அல்ல. அனைத்தும் ஒரே குறிக்கோளான இறைவனை அடைவதற்கான வழிகளே ஆகும். அவரவர் தன்மைக்கு ஏற்ப எந்த வழியைப் பின்பற்றினாலும் இறுதியில் அடையவேண்டிய லட்சியம் எல்லோருக்கும் ஒன்றுதான். 
* வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்படை காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம் தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை. 
* குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம். 
* செல்வத்தாலும், சுற்றத்தாலும், இளமையாலும் யாரும் கர்வம் கொள்ளாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் இவையெல்லாம் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுளை அறிய முற்படுங்கள். 
* குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் பெண்ணின்பத்தை நாடுகிறார்கள். வயோதிகர்கள் கவலையில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின் மீது பற்றுவைக்க மறந்து விடுகிறார்கள்.

Tuesday, September 27, 2011

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.
ஓம்
பூர்புவஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோநப்ரசோதயாத்
அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம்பூ உலகம்,மத்திய உலகம்மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அதுஅந்தப் பரம சக்தி நமதுபுத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

24 
அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம்இதை தினசரி ஜபித்து வந்தால்பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்.  சக்திகள் பெருகும்வைராக்கியம் உண்டாகும்.காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்இதைஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்மற்ற எல்லா மந்திரங்களுக்கும்தாய் போன்றவள் காயத்ரிகாயத்ரி சந்தசமம் மாத  எனப்படும்.
இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்அதற்காகவேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம்ஜபித்தால் பலன் கிடைக்காது.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள்உண்டுஇந்த மந்திரம் காலையில்  காயத்ரி க்காகவும்நடுப்பகலில் சாவித்ரிக்காகவும்மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன.மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம்காயத்ரி ஜபம் செய்யாத எந்தஜபமும்ஆராதனையும் பயனற்றது.
இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும்பிறகு மூன்று வியாஹ்ருதிகளும்பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளதுஇதை ஒரே மூச்சில்சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும்இரண்டாவது வியாஹ்ருதிகளிலும்,மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும்நான்காவதுபர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும்ஐந்தாவது தியோயோ ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.
மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்தமந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாதுமுறையாக27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இருகைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும்மதியம் கிழக்கு முகமாகஉட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும்மாலையில்மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம்செய்ய வேண்டும்.
தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும்ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10தடவை ஜபிக்கவும்உடலும்உள்ளமும் தூய்மையான குழந்தைகளும்வயதானபெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.
காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:
யோ                     -எவர்
                           -நம்முடைய
தியோ                 -புத்தியை
தத்                        -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத்    -தூண்டுகிறாரோ
தேவஸ்ய          -ஒளிமிக்கவராக
ஸவிது               -உலகைப் படைத்த
வரேண்யம்        -மிகவும் உயர்ந்ததான
பர்கோ                  -சக்தியை
தீமஹி                -தியானிக்கிறோம்
நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பதுசுருக்கமான பொருள்காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர்பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.