Wednesday, April 4, 2012

இடைக்காடர் சித்தர்

திருஅண்ணாமலை கோயிலுக்குள் இடைக்காடர் சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது!!!








சிவ ஸ்தலங்களில் மிக அரிதான,மிக முக்கியமான,அளவற்ற சக்திவாய்ந்த ஆலயம் அண்ணாமலை ஆகும்.அருணாச்சலேஸ்வரின் இந்த ஆலயத்தினுள்ளே சித்தர்களில் ஒருவரான இடைக்காடரின் ஜீவசமாதி  அமைந்திருக்கிறது.

திருமஞ்சனக்கோபுரம் வழியாக திரு அண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்ததும்,இடது பக்கமாக தெரிவது கோசாலை ஆகும்.இந்த கோசாலைக்குள்ளே தெற்கு நோக்கியவாறு இருக்கும் ஒரு சிறு குகை போன்ற அமைப்பே இடைக்காடர் சித்தரின் ஜீவசமாதி ஆகும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10 முதல் 12 மணிக்குள்ளும்;அல்லது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7 முதல் 9 மணிக்குள்ளும் இடைக்காடர் சித்தரை வழிபட ஏற்ற நேரம் ஆகும்.

முழுக்க முழுக்க ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலை ஒன்று,
விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள் குறைந்தது கால் கிலோ, விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழம் பாக்கெட் ஒன்று,
டயமண்டு வடிவில் இருக்கும் கல்கண்டு ஒரு கிலோ, பத்தி,நெய் தீபம் ஏற்ற கொஞ்சம் நெய் மற்றும் தாமரை நூல் திரி,தீப்பெட்டி,(மணமானவர்கள்) தேங்காய்,வாழைப்பழம் மற்றும் வேறு இரண்டு விதமான பழங்களுடன் வந்து இடைக்காடரை வழிபட்டு  செல்ல வேண்டும்.இவ்வாறு எட்டு திங்கட் கிழமை அல்லது எட்டு வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபாடு செய்தால்,நமது தீர்க்கமுடியாத பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

இடைக்காடர் சித்தரை வழிபட்டபின்னர்,கொஞ்சம் டயமண்டு கல்கண்டையும்,கொஞ்சம் வாழைப்பழத்தையும்,கொஞ்சம் விதையில்லாத திராட்சை மற்றும் பேரீட்சைப் பழங்களையும் கண்டிப்பாக அவரவர் வீட்டுக்குக் கொண்டு சென்று தனது ரத்த உறவுகளுக்கு தர வேண்டும்.இவ்வாறு செய்தால் தான் வழிபாடு முழுமையடையும்.

இந்த பதிவினை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.எல்லாம் சித்தர்களின் ஆசிகள்!!!

ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்
http://www.aanmigakkadal.com/2012/04/blog-post_02.html

இந்தியாவைக் காப்போம்;இன்னும் பலரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைப்போம்!!!



பெருங்கடலைக் கொண்ட மதம்,2010க்குப்பிறகு உலகை ஆளும்; என்பது பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் நார்ஸ்டர் டாமஸின் வாக்கு ஆகும்.அதற்கான நிகழ்வுகள் நிறைய தற்போது நிகழ்ந்துவருகின்றன.இருப்பினும்,நமது தமிழ்நாட்டிலும் உலகமெங்கும் தனி மனிதன்,குடும்பம் போன்றவைகள் பலவிதமான பொருளாதார கஷ்டங்களுக்கு உள்ளாகிவருகின்றன.
இந்த நிலையை மாற்றிட நாம் செய்ய வேண்டியது இரண்டு காரியங்கள் ஆகும்.
முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த வருடம் முழுவதும் எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் என்ற துண்டுப்பிரசுரத்தை நமது ஊரில் பரவச் செய்ய வேண்டும்.
ஏனெனில்,நேர்மையாக வாழ்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் அனைவருமே மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகிவருகின்றனர்;அப்படிப் பட்டவர்களுக்கு இந்த துண்டறிக்கை விரைவாகச் சென்றடைய வேண்டும்.

நடைமுறையில் நேர்மையாளர்களைப் போல நடிப்பவர்கள் நல்லது கெட்டதுகளை சுலபமாக அடையாளம் கண்டுகொண்டு தன்னை காப்பாற்றிக்கொள்கின்றனர்.நிஜமாகவே நேர்மையாக இருப்பவர்கள் தனது வட்டத்தை விட்டு வெளிவருவதில்லை;எனவே,வழக்கமான ஓம்சிவசிவஓம் துண்டறிக்கையை இன்னும் எளிமையாக்கியிருக்கிறோம்.இந்த துண்டறிக்கைகளை இந்த வருடம் முழுவதும் ஆன்மீக அமைப்புகள்,ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள்,ஜோதிட பயிற்சிவகுப்புகள்,புராதனமான கோவில்கள்,தேய்பிறைஅஷ்டமி நாட்கள்,சிவராத்திரி,அமாவாசை நாட்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் தமிழ்நாடெங்கும் விநியோகிக்க திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
நமது ஆன்மீகப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள்,நம்மை நேரில் சந்தித்தவர்கள் இந்த ஆன்மீக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும்படி அழைக்கிறோம்.
நீங்கள் மூன்று விதமாக இந்த பிரச்சாரத்தில் பங்கெடுக்கலாம்.
1.நீங்களே உங்கள் பகுதியில் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் பற்றிய துண்டறிக்கை(நோட்டீஸ்)யை விநியோகிக்கலாம்.

2.நீங்களே இந்த ஓம்சிவசிவஓம் துண்டறிக்கையை குறைந்தது 1000 எண்ணிக்கையில் அச்சடித்துத் தரலாம்.(அச்சடிக்க செலவு 1000 பிரதிகளுக்கு ரூ.500/-க்குள்தான் ஆகும்)
3.இணையம் வழியாக ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்துக்குரிய வலைப்பூவை www.omshivashivaom.blogspot.com ஐ பரப்பலாம்;இதில் உள்ள பதிவுகளில் உங்களுக்கு விருப்பமான பதிவை உங்களில் முகநூலிலும்(facebook), குழுவிலும்(groups,discussion board),அரட்டை அறையிலும்(chat) பரப்பலாம்.மறக்காமல் மேலே உள்ள வலைப்பூ முகவரியை அத்துடன் இணைக்கவும்.
இவ்வாறு செய்வதன்மூலமாக,உங்கள் பிரச்சாரத்தினால் சிலபல நல்ல உள்ளங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவார்கள்;இதனால் உங்களின் தீராத மன உளைச்சல்கள் தீரும்;நீண்டகால பிரச்னைகள் முடிவுக்கு வரும்(எனக்கு அப்படித்தான் ஆனது);அப்படி ஜபிப்பவர்களின் பிரச்னைகள் தீரும்;முடிவாக இந்தியாவானது விரைவாக வல்லரசு நிலையை எட்டும்;இதன் மூலமாக மின்சாரப்பற்றாக்குறை விரைவாகத் தீரும்;அனைவரின் தனிநபர் வருமானம் அதிகரிக்கும்;செலவுகள் குறையும்.

பின்குறிப்பு:இந்த வருடத்தில் நமது பூமியும்,நாடும்,மாநிலமும் பல பிரச்னைகள் சந்திக்க இருப்பது நவக்கிரகங்களின் செயல்பாடுகள் மூலமாக அறிகிறோம்.இதை தடுக்க நாம் செய்யும் முக்கியமான ஆன்மீக சேவை+ தேச சேவை & மக்கள் சேவை இதுதான்.
நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் வெறும் 100 நாட்களுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவிட்டு,இந்த பதிவினை மீண்டும் வாசிக்கவும்.அப்போது என்ன உணர்வீர்கள் தெரியுமா?

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்

http://www.aanmigakkadal.com/2012/04/blog-post_03.html