Thursday, September 6, 2012

ஏன் ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?



நல்ல கேள்வி!!! உங்களிடம் மூன்று கோடி ரூபாய்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்;அதைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்?

நிச்சயமாக நாம் எதையெல்லாம் நீண்டநாட்களாக விரும்பினோமோ அதை அனுபவித்துவிடுவோம்;இன்றுதான் நமது நாட்டிலேயே விலை உயர்ந்த கார்கள்,விலைமதிப்பற்ற நகைகள்,ஆடம்பரமான வீடுகள் என எல்லாமே கிடைக்கின்றன.
ஒரு முறை எனது ஆஸ்தான ஜோதிடர் ஒருவரிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டேன்:

அண்ணே,உங்களிடம் ஒரு கோடி ரூபாய் தந்து அதை ஒரே நாளில் செலவழிக்கணும்னு நான் சொன்னா நீங்க என்ன செய்வீங்க?

அவர் மனதுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.அந்த  சிரிப்பின் ஒரு பகுதி அவரது புன்னகையாக வெளிவந்தது.

சொல்லுங்க; என்று அவரை வற்புறுத்தினேன்.

டெல்லியில் ஒரு ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் நிறுவனம் இருக்குது;அங்கே ஒரு நாள் வாடகை அம்பது லட்சம் ரூபாய்! அதை நம்ம ஊருக்கு வரச் சொல்லுவேன்;மீதியை எப்படிச் செலவழிப்பேன்னு உனக்குத் தான் தெரியுமே?
என அவர் படபடவென சொல்லி முடித்ததும்,நாங்கள் இருவருமே சிரித்தோம்;அந்த சிரிப்பு சிரித்து முடிய சில நிமிடங்கள் ஆனது.

இன்று நமது நாடு இருக்கும் நிலையில் சாதாரணக் குடும்பங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதே பெரிய சாதனையாக மாறிவிட்டன;ஏனெனில்,தினம் தோறும் விலைவாசி ஏறுகிறது;ஆனால்,சம்பளம் மட்டும் வருடத்துக்கு ஒருமுறைதான் உயருகிறது.எப்படி காலம் தள்ளுவது?



தனிமனிதனின் நிலை உயர்த்தப்பட்டால்,அவனது உயர்வு அவன் பணிபுரியும் நிறுவனம் மற்றும் அமைப்பின் நிலையை உயர்த்திவிடும்.அந்த நிறுவனங்களின் நிலை உயர்ந்தால்,அதன் தொடர் விளைவாக ஒரு நாட்டின் நிலையும் உயர்ந்துவிடும்.எனவே,அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதனையும் முன்னேற்றுவதே நமது இறைசேவை ஆகும்.ஆனால்,இன்று இலவசமாக இப்படிப்பட்ட முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஆன்மீக அமைப்புகளைத் தேட வேண்டியிருக்கிறது.அதற்கு தகுந்தாற்போல நமது நாட்டையும் முதலாளித்துவ நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.இதனால்,பணம் இருப்பவர்களிடம் மேலும் மேலும் பெருமளவு பணம் குவிந்துகொண்டிருக்கிறது;பணம் இல்லாதவர்கள் தினசரி வாழ்க்கை வாழ்வதே சாதனையாகிக்கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் இருப்பவன்,இல்லாதவன் இந்த இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாலும்,ஜபிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாலும் உருவாகிவருகிறது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழுகோடியே ஐம்பது லட்சம் பேர்கள் ஆகும்.தமிழ்நாட்டுக்கு வெளியே சுமார் மூன்று கோடித்தமிழர்கள் இந்தியாவெங்கும் மற்றும் உலக நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களில் பத்தில் ஒருவருக்கு ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிப்பது? என்ற வழிமுறை சென்றடைய வேண்டும் என ஆன்மீகக்கடல் விரும்புகிறது.இந்த மகத்தான தெய்வீகம் சார்ந்த தேசசேவையில் நீங்களும் பங்கேற்கலாம்;எப்படித் தெரியுமா?


ஆயிரம் நோட்டீஸ் அச்சடித்து ஆன்மீகக்கடலுக்கு அனுப்பி வைக்கலாம்;ஆயிரம் நோட்டீஸிக்கு ரூ.450/-தான் ஆகிறது.அக்டோபர் 2012 வது மாதத்தில் இரண்டு சனிப்பிரதோஷங்கள் வர இருக்கிறது.இந்த நாட்களில் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்களை விநியோகிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்;(ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள் குறைந்தது  5000 அச்சடித்து எமக்கு அனுப்புவது நல்லது)


அல்லது


நீங்களே அச்சடித்து உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸை விநியோகிக்கலாம்;இதன் மூலமாக உங்களால் உங்களுடைய ஊரில் ஒருசிலராவது ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பார்கள்;அவர்கள் அவ்வாறு ஜபிப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்கப்போவதால்,அவர்களின் ஜபத்தின் பலன்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உங்களை வந்து சேரும்.இதன் மூலமாக உங்களுடைய மன உளைச்சலும்,பிரச்னைகளும் தீர்ந்துவிடும் அல்லது தீர்ந்துவிடுமளவுக்கு நீங்கள் சக்தி வாய்ந்தவராக மாறிவிடுவீர்கள்.கடந்த காலங்களில்  பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு இதுதான் நிகழ்ந்திருக்கிறது.


அல்லது


எம்மோடு அக்டோபர் 2012 இல் வரும் சனிப்பிரதோஷங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகிக்க வரலாம்;எங்கே என்பதை அறிய செல் எண்,போட்டோவுடன் மெயில் அனுப்பவும்;


அல்லது


இணையம் வழியாக ஓம்சிவசிவஓம் வலைப்பூவையும்,நோட்டீஸையும் பரப்பலாம்; groups, Facebook, google+,  free image hosting webs மற்றும் உங்களுடைய blogspots,wordpresses,google webpages,freewebs மூலமாக பரப்பலாம்.இப்படி இந்த வருடம் முழுவதும் பரப்புவது அவசியம் மற்றும் அவசரம் ஆகும்.ஏனெனில்,இதன் மூலமாக வர இருக்கும் அழிவுகளை பெருமளவு குறைக்க முடியும்.


நீங்கள் ஒரு நாளுக்கு 30 நிமிடம் வீதம் சுமார் 100 நாட்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தீர்கள் எனில்,மேலே கூறிய அத்தனை விதமான வழிமுறைகளையும் நீங்களே நடைமுறைப்படுத்தத் துவங்குவீர்கள்.

ஒரு புள்ளிவிபரப்படி,சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை நெருங்கிவிட்டது;கோயம்புத்தூரின் மக்கள் தொகை பதினேழு லட்சம் ஆகும்.தவிர ,தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத்தொகுதிகள் இருக்கின்றன.இதுவரையிலும் சுமார் 25 நகரங்களில் இருக்கும் 30 சிவாலயங்களில் தான் ஓம்சிவசிவஓம் விநியோகம் ஆகியிருக்கிறது.இது போதவே போதாது;வாருங்கள்! கை கொடுங்கள்!! நமது ஆன்மீக சக்தியை அதிகரிப்போம்;நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆன்மீக வழியில் வலுப்படுத்துவோம்;இந்த உலகத்தின் ஒரே வல்லரசாக மாற்ற முயலுவோம்;


ஓம்சிவசிவஓம்


 Thanks to 

http://www.aanmigakkadal.com/2012/09/blog-post_5.html

Wednesday, April 4, 2012

இடைக்காடர் சித்தர்

திருஅண்ணாமலை கோயிலுக்குள் இடைக்காடர் சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது!!!








சிவ ஸ்தலங்களில் மிக அரிதான,மிக முக்கியமான,அளவற்ற சக்திவாய்ந்த ஆலயம் அண்ணாமலை ஆகும்.அருணாச்சலேஸ்வரின் இந்த ஆலயத்தினுள்ளே சித்தர்களில் ஒருவரான இடைக்காடரின் ஜீவசமாதி  அமைந்திருக்கிறது.

திருமஞ்சனக்கோபுரம் வழியாக திரு அண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்ததும்,இடது பக்கமாக தெரிவது கோசாலை ஆகும்.இந்த கோசாலைக்குள்ளே தெற்கு நோக்கியவாறு இருக்கும் ஒரு சிறு குகை போன்ற அமைப்பே இடைக்காடர் சித்தரின் ஜீவசமாதி ஆகும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10 முதல் 12 மணிக்குள்ளும்;அல்லது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7 முதல் 9 மணிக்குள்ளும் இடைக்காடர் சித்தரை வழிபட ஏற்ற நேரம் ஆகும்.

முழுக்க முழுக்க ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலை ஒன்று,
விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள் குறைந்தது கால் கிலோ, விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழம் பாக்கெட் ஒன்று,
டயமண்டு வடிவில் இருக்கும் கல்கண்டு ஒரு கிலோ, பத்தி,நெய் தீபம் ஏற்ற கொஞ்சம் நெய் மற்றும் தாமரை நூல் திரி,தீப்பெட்டி,(மணமானவர்கள்) தேங்காய்,வாழைப்பழம் மற்றும் வேறு இரண்டு விதமான பழங்களுடன் வந்து இடைக்காடரை வழிபட்டு  செல்ல வேண்டும்.இவ்வாறு எட்டு திங்கட் கிழமை அல்லது எட்டு வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபாடு செய்தால்,நமது தீர்க்கமுடியாத பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

இடைக்காடர் சித்தரை வழிபட்டபின்னர்,கொஞ்சம் டயமண்டு கல்கண்டையும்,கொஞ்சம் வாழைப்பழத்தையும்,கொஞ்சம் விதையில்லாத திராட்சை மற்றும் பேரீட்சைப் பழங்களையும் கண்டிப்பாக அவரவர் வீட்டுக்குக் கொண்டு சென்று தனது ரத்த உறவுகளுக்கு தர வேண்டும்.இவ்வாறு செய்தால் தான் வழிபாடு முழுமையடையும்.

இந்த பதிவினை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.எல்லாம் சித்தர்களின் ஆசிகள்!!!

ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்
http://www.aanmigakkadal.com/2012/04/blog-post_02.html

இந்தியாவைக் காப்போம்;இன்னும் பலரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைப்போம்!!!



பெருங்கடலைக் கொண்ட மதம்,2010க்குப்பிறகு உலகை ஆளும்; என்பது பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் நார்ஸ்டர் டாமஸின் வாக்கு ஆகும்.அதற்கான நிகழ்வுகள் நிறைய தற்போது நிகழ்ந்துவருகின்றன.இருப்பினும்,நமது தமிழ்நாட்டிலும் உலகமெங்கும் தனி மனிதன்,குடும்பம் போன்றவைகள் பலவிதமான பொருளாதார கஷ்டங்களுக்கு உள்ளாகிவருகின்றன.
இந்த நிலையை மாற்றிட நாம் செய்ய வேண்டியது இரண்டு காரியங்கள் ஆகும்.
முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த வருடம் முழுவதும் எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் என்ற துண்டுப்பிரசுரத்தை நமது ஊரில் பரவச் செய்ய வேண்டும்.
ஏனெனில்,நேர்மையாக வாழ்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் அனைவருமே மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகிவருகின்றனர்;அப்படிப் பட்டவர்களுக்கு இந்த துண்டறிக்கை விரைவாகச் சென்றடைய வேண்டும்.

நடைமுறையில் நேர்மையாளர்களைப் போல நடிப்பவர்கள் நல்லது கெட்டதுகளை சுலபமாக அடையாளம் கண்டுகொண்டு தன்னை காப்பாற்றிக்கொள்கின்றனர்.நிஜமாகவே நேர்மையாக இருப்பவர்கள் தனது வட்டத்தை விட்டு வெளிவருவதில்லை;எனவே,வழக்கமான ஓம்சிவசிவஓம் துண்டறிக்கையை இன்னும் எளிமையாக்கியிருக்கிறோம்.இந்த துண்டறிக்கைகளை இந்த வருடம் முழுவதும் ஆன்மீக அமைப்புகள்,ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள்,ஜோதிட பயிற்சிவகுப்புகள்,புராதனமான கோவில்கள்,தேய்பிறைஅஷ்டமி நாட்கள்,சிவராத்திரி,அமாவாசை நாட்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் தமிழ்நாடெங்கும் விநியோகிக்க திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
நமது ஆன்மீகப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள்,நம்மை நேரில் சந்தித்தவர்கள் இந்த ஆன்மீக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும்படி அழைக்கிறோம்.
நீங்கள் மூன்று விதமாக இந்த பிரச்சாரத்தில் பங்கெடுக்கலாம்.
1.நீங்களே உங்கள் பகுதியில் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் பற்றிய துண்டறிக்கை(நோட்டீஸ்)யை விநியோகிக்கலாம்.

2.நீங்களே இந்த ஓம்சிவசிவஓம் துண்டறிக்கையை குறைந்தது 1000 எண்ணிக்கையில் அச்சடித்துத் தரலாம்.(அச்சடிக்க செலவு 1000 பிரதிகளுக்கு ரூ.500/-க்குள்தான் ஆகும்)
3.இணையம் வழியாக ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்துக்குரிய வலைப்பூவை www.omshivashivaom.blogspot.com ஐ பரப்பலாம்;இதில் உள்ள பதிவுகளில் உங்களுக்கு விருப்பமான பதிவை உங்களில் முகநூலிலும்(facebook), குழுவிலும்(groups,discussion board),அரட்டை அறையிலும்(chat) பரப்பலாம்.மறக்காமல் மேலே உள்ள வலைப்பூ முகவரியை அத்துடன் இணைக்கவும்.
இவ்வாறு செய்வதன்மூலமாக,உங்கள் பிரச்சாரத்தினால் சிலபல நல்ல உள்ளங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவார்கள்;இதனால் உங்களின் தீராத மன உளைச்சல்கள் தீரும்;நீண்டகால பிரச்னைகள் முடிவுக்கு வரும்(எனக்கு அப்படித்தான் ஆனது);அப்படி ஜபிப்பவர்களின் பிரச்னைகள் தீரும்;முடிவாக இந்தியாவானது விரைவாக வல்லரசு நிலையை எட்டும்;இதன் மூலமாக மின்சாரப்பற்றாக்குறை விரைவாகத் தீரும்;அனைவரின் தனிநபர் வருமானம் அதிகரிக்கும்;செலவுகள் குறையும்.

பின்குறிப்பு:இந்த வருடத்தில் நமது பூமியும்,நாடும்,மாநிலமும் பல பிரச்னைகள் சந்திக்க இருப்பது நவக்கிரகங்களின் செயல்பாடுகள் மூலமாக அறிகிறோம்.இதை தடுக்க நாம் செய்யும் முக்கியமான ஆன்மீக சேவை+ தேச சேவை & மக்கள் சேவை இதுதான்.
நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் வெறும் 100 நாட்களுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவிட்டு,இந்த பதிவினை மீண்டும் வாசிக்கவும்.அப்போது என்ன உணர்வீர்கள் தெரியுமா?

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்

http://www.aanmigakkadal.com/2012/04/blog-post_03.html

Monday, January 30, 2012

நிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..



முருகர் நிகழ்த்திய அற்புதங்கள் என்று பல கதைகள் உண்டு. வரலாற்றுரீதியில் லேட்டஸ்ட்டாக அருணகிரிநாதர் கதையை அறிந்திருப்பீர்கள். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதால், தொழுநோய் வந்து உற்றார் உறவினர் எல்லோராலும் விரட்டியடிக்கப்பட்ட அருணகிரிநாதர், தான் செய்த தவறுகளை உணர்ந்து இனியும் தான் வாழ்வது வீண் என்று முடிவு செய்து திருப்பரங்குன்றம் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அப்போது முருகர் தடுத்தாட்கொண்டு, நல்ல உடல்நலனையும், அருளையும் வாரி வழங்கியது வரலாறு.

அதிகமாக அறிவு வளர்ந்துவிட்ட நமக்கு ‘இதென்னடா, இப்படிக் கதை விடுறானுக..தொழுநோய் வந்துச்சாம்..முருகரும் வந்தாராம்..ச்சூ மந்திரகாளின்னு தொழுநோயை விரட்டினாராம்..நல்லா விட்றுக்காங்கப்பா ரீலு’ என்று தோன்றும். அது ஒன்றும் பெரிய தவறில்லை தான்..அது அப்படியே இருக்கட்டும்..

இன்று நான் என் உறவினர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்..இது நடந்தது சரியாக 22 வருடங்கள் முன்பு..அவர் ஒரு கடின உழைப்பாளி. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது. குழந்தையில்லை. நன்றாக இருந்த மனிதர் திடீரென மெலியத் தொடங்கினார். கூடவே தீராத ஜலதோஷம் வேறு. பல மாத்திரைகளை அவராகவே வாங்கிப் போட்டும் ஒன்றும் கேட்கவில்லை.

உடம்பில் இருந்த சத்தையெல்லாம் யாரோ ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போல், தினமும் அவரின் மெலிவு சீராகத் தொடர்ந்து. கூடவே இருமலும் சேர்ந்துகொண்டது. அதன்பின் ஆஸ்பத்திரிக்குச் சென்று காட்டினால் ‘காசநோய்’ என்று சொல்லிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, மிகவும் முத்திப்போய்விட்டதாகவும், இன்னும் சில மாதங்களே இருப்பார் என்றும் சொல்லிவிட்டார்கள். அப்போது மருத்துவ வசதிகளும் இந்த அளவிற்கு இல்லை. வசதியின்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரியை விட்டால், வேறு வழியும் இல்லை.

அவர் உழைப்பில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் இனி அவ்வளவு தான் என்ற செய்தி கிடைக்கவுமே அவர் உடன்பிறப்புகள் இந்தப் பக்கமே வருவதில்லை. நோய் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் வேறு. கையிலோ காசும் இல்லாமல், வறுமையும் சேர்ந்து அவரைக் கொன்றது. அப்போது அவர் மனைவி செய்தது தான் ஆச்சரியமான விஷயம். அவராலோ வேலைக்குப் போக முடியவில்லை. இனி ரொம்ப நாள் அவர் இருக்கப்போவதும் இல்லை. இனி எதற்கு அவருடன் சேர்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று நன்றாக யோசித்துவிட்டு, தன் தாய்வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டார். 

‘இல்லானை இல்லாளும் மதியாள்’ என்ற அவ்வையின் வாக்கின் அர்த்தத்தை அன்று தான் அவர் உணர்ந்தார். மனம் நொந்தார். உயிருள்ள அனாதைப் பிணமாய் ஆனார். ’இது என்ன வாழ்க்கை..சிறு நோய் வந்தால் எல்லாமே தலைகீழாய் மாறிவிடுமா? இதற்கா இத்தனை ஆட்டம், கொண்டாட்டம்’ என்று யோசித்தார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அவருக்கு அவர்களது குடும்பம் அடிக்கடி சென்று வழிபடும் ஸ்ரீவாளசுப்பிரமணியர் கோவில் ஞாபகம் வந்தது. அது ராஜபாளையம் அருகே தென்மலை என்ற கிராமத்து மலைமேல் உள்ளது. மிகச் சிறிய கோவில். முருகர் மட்டுமே அங்கு உண்டு. யாரும் அடிக்கடி அங்கு போக மாட்டார்கள். ஏறிச்செல்வதும் கஷ்டம். அங்கே அப்போது கட்டிடங்களும் ஏதும் கிடையாது. ஒதுங்க நிழலும் கிடையாது. ஆனால் ஒரு நாழிக்கிணறும், சிறு குட்டை போன்ற தெப்பமும் உண்டு.

தான் இனி அதிக நாள் இருக்க மாட்டோம் என்று அவருக்கே தெரிந்தது. இந்த மனிதர்களிடையே சாவதைவிட அங்கு சென்று முருகன் காலடியில் உயிரை விடலாம் என்று முடிவு செய்தார். அந்த முருகரைப் பற்றி பலகதைகள் உண்டு. எங்கள் தாத்தா ஒருவர் ஒரு நள்ளிரவில் அந்த மலையில் இருந்து கோமணம் கட்டிய ஒருவர், கையில் தடியுடன் உலாத்தியதைக் கண்டிருக்கிறார். எனவே அந்த சக்தி வாய்ந்த மலைக்குப் போய், அங்கேயே வயனம் காப்பது என்று முடிவு செய்தார்.

வயனம் காத்தல் என்பது ஏறக்குறைய துறவு நிலை. கோவிலே கதி என்று உட்கார்ந்து விடுவது. அங்கு என்ன கிடைக்கிறதோ, அதை மட்டுமே உண்டு வாழ்வது. அந்த மலையில் த்ண்ணீரைத் தவிர வேறேதும் கிடையாது. எப்போதாவது யாராவது வந்தால், சாப்பாடு தருவார்கள். இல்லையென்றால் அதுவும் அவன் சித்தம் என்று சும்மா உட்கார்ந்து விடுவது.

அவர் அப்படியே அங்கு அமர்ந்தார். ‘ஏன் எனக்கு இந்த நிலைமை? வாழ வேண்டிய வயதில் ஏன் என்னை நோயாளி ஆக்கினாய்?’ என்று தினமும் அழுதபடியே முருகரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேயிருந்தார். காசநோயும் முத்திக்கொண்டே போனது. இப்படியே ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கு அவர் தனித்திருந்தார். உடம்பில் சதை காணாமல் போய், எழும்பும் உருகத் தொடங்கியிருந்தது. சளி உடலை அரித்துத் தின்றுகொண்டிருந்தது. 


அவர்-மலை-முருகர் மூவர் மட்டுமே இருந்தனர். நாளாக நாளாக அவரே மலை போல் தன்னைப் பற்றிய உணர்வற்றவராய் ஆனார். தன் உடலை மறந்தார், நோயையும் மறந்தார். முருகரை மட்டுமே நினைந்தார். கோவணாண்டி மட்டுமே அவருக்குத் தெரிந்தார். இவரும் சிலையாய் முருகர் சன்னதி எதிரே சமைந்திருந்தார். ஒரு கார்த்திகை மாத நள்ளிரவில் அவருக்கு ஒரு குரல் கேட்டது. ”எழுந்து உள்ளே வா” என்று கர்ப்பகிரகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் எழுந்து உள்ளே போனார். அங்கே முருகரின் சிலை இல்லை. கண்ணை கூசச் செய்யும் ஒளி மட்டுமே அங்கே இருந்தது. அவருக்கு இது கனவோ என்று தோன்றியது. ஆனால் தான் கருவறைக்குள் நின்றுகொண்டிருப்பதும் அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு ஏதும் சொல்ல வராமல் அழுதார், அங்கேயே சரிந்து உட்கார்ந்து அழுதார். அப்படியே தூக்கம் அவரை இழுத்துக்கொண்டது.

மறுநாள் காலையில் உடலில் பலம் கூடியிருப்பது போல் தெரிந்தது. இருமல் இல்லை. சந்தேகத்துடனே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்தார். சளியோ இருமலோ இல்லவே இல்லை. அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ‘முருகா..முருகா’ என்று ஆனந்தக் கூத்தாடினார். மலையில் இருந்து இறங்கி ஊருக்குள் போய்ச் சொன்னார். மனைவியும் திரும்பி வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு பழைய நிலைக்கு மாத்திரைகள் இல்லாமலே திரும்பியது. டாக்டர்களுக்கும் ஆச்சரியம் தான். சொந்தங்களுக்கும் ஆச்சரியம் தான்.

இப்போதும் அவர் செவ்வாய்-வெள்ளியன்று அதிகாலையில் அந்த முருகர் கோவிலுக்குப் போய் வருகிறார். ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று அவர் பொறுப்பில் பூஜையும் நடத்தப்படுகிறது. எனக்கு அவர் சித்தப்பா முறையாவார். இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள். நல்ல வசதியுடன் முருகன் அருளால் வாழ்கிறார்.

சென்ற வருட கார்த்திகைத் திருவிழாவின்போது, அந்தக் கோவிலில் அவருடன் இருந்தேன். இன்றும் அவர் பக்திகுறையாமல் ஒவ்வொரு படி ஏறும்போதும் முருகா..முருகா என்று அழைத்தபடியே வந்தார். முருகரின் அருளுக்குச் சாட்சியாக அவர் வலம் வருவதை பலரும் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். ‘இது எப்படிச் சாத்தியம்?” என்று இப்போது புதிதாக அவரைப் பார்த்த எல்லோருமே கேட்டார்கள்.

அது அவருக்கு எப்படித் தெரியும்?

அதை அவன் மட்டுமே அறிவான்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!


கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!


மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!


ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


கோவிலுக்குச் செல்லும் வழி:

ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் பருவக்குடி-முக்குரோடு பஸ் ஸ்டாப்பில் இறங்கவும். அங்கிருந்து தனியே சிவகிரிக்கு ஒரு சாலை செல்லும். அதில் சென்றால் இரண்டாவது ஊர் தென்மலை. அங்கே மலை மேல் வீற்றிருக்கின்றார் ஸ்ரீவாள சுப்பிர மணியர். சிறிய கோவில், இப்போது கொஞ்சம் எடுத்துக் கட்டியுள்ளார்கள். வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜை நடக்கும். ஆனாலும் மற்ற நாட்களிலும் நல்ல அதிர்வு இருக்கும் இடம் அது. யாருமே இல்லாத நேரத்தில் தரிசிப்பதும் நல்ல அனுபவம்.
 
நம்பினோர் கைவிடப்படார்...!
 
நன்றி : திரு . செங்கோவி .  


Read more: http://www.livingextra.com/2012/01/blog-post_3082.html#ixzz1koSP6dqY

தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்வோம்....!


இததகவலை நம் வாசகர்களுக்காக அனுப்பிவைத்த நண்பர். கோபால கிருஷ்ணனுக்கு நன்றி...

இன்று பல பெரிய பெரிய பல்நாட்டு நிறுவனங்களுக்கு - பயிற்சி அளிக்க வருபவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனரோ, அந்த தகுதிகளை தனது பத்தே வயதில் , சாதித்துக் காட்டிய - இந்த நெல்லை குழந்தைக்கு , அவர் மென்மேலும் சாதனை படைக்க மனமுவந்து வாழ்த்துவோம்... !

நம் வாசகர்களில்  அரசு உயர் மட்டத்தில் இதை எடுத்துச் சொல்ல செல்வாக்கு வாய்ந்தவர்கள் , கொஞ்சம் சிரமேற்கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்...!

                                
              ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!   
                              வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) Iஉலக சாதனை..Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
                                         
                                     வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

                                        கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.  


15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.





                                                     
                                         இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
                                                 
                                            உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional). 
                                         


               CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.



                  

           உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும். 



நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    
வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!


Read more: 
http://www.livingextra.com/2012/01/blog-post_9918.html#ixzz1koVwcYg5