Thursday, January 5, 2012

கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!

ன்றைய அவசர யுகத்தில் கிடைத்ததை உள்ளே தள்ளி விட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஓடிக்கொண்டிருப்ப வர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை என பல பிரச்சினைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின் றனர்.

மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டிப் பார்த்த பின்னர்தான், சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டிப் பார்க்கிறது.

அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராகப் போராடும் உணவுப் பட்டியல் இதோ:

ஓட்ஸ்: உடல் மெலிய விரும்புவர் களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில் முதன்மையாக இடம்பெறுவது இது.நார்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்ப திலும், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மைப் பாதுகாக்கிறது.

ஓட்ஸில் 'பீட்டா-குளூகான்'என்ற ஒருவகையான சிறப்பு நார்ச்சத்து அடங்கியுள்ளது. இந்த நார்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க மிகவும் உதவுகிறது. அதே சமயம் நல்ல கொழுப்பின் அளவு மாறாமல் அப்படியே இருப்பதுதான் இதிலுள்ள தனிச் சிறப்பு.

இருதய நோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழு தானிய உணவு இந்த ஓட்ஸ்தான்.

உடலில் மிக அதிக கொழுப்புடைய வர்கள் கூட (220 மில்லி கிராமுக்கும் மேல்) நாளொன்றுக்கு வெறும் 3 கிராம் ஓட்ஸை - அதாவது ஒரு சிறிய கிண்ணம் அளவு - உட்கொண்டால் கூட அதிகப் படியான கொழுப்பு முற்றிலும் குறைந்து விடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந் துள்ளது. அந்த அளவிற்கு ஓட்ஸ் நமது உடலில் கொழுப்பற்றதாக்கி  விடுகிறது.

சோயாபீன்ஸ்: ஓட்ஸை போன்றே சோயா பீன்ஸும் பல்வேறு இருதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்ப தோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப் பையும் கரைத்து,நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

பச்சைத் தேயிலை: 'கிரீன் டீ" எனப் படும் பச்சை தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் கிடைக்கும் பலன்களை சொல்லிமாளாது. பச்சைத் தேயிலை தேநீர் மிக அருமை என்றாலும், சாதா தேயிலை கொண்டு தயாரிக்கப் படும் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீயிலும் பச்சைத் தேயிலையின் நற் குணங்கள் ஓரளவு அடங்கியுள் ளது. கெட்ட கொழுப்பை குறைப்பது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் உறைதல் போன்ற வற்றிற்கு எதிராகச் செயல்படுவது போன்ற அற்புதங்களை இந்த பச்சை தேயிலை நிகழ்த்திக் காட்டுகிறது.

மேலும் தேநீரில் 'ஃபோலிக் அசிட்' எனப்படும் உயிர்ச் சத்தான ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது. இது இருதய நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தை குறைக்கிறது. நாளொன்றுக்கு ஒருவருக்கு தேவையான ஃபோலிக் அமில சத்தில் 25 விழுக்காடு, ஒருவர் தினமும் அய்ந்து கப் தேநீர் அருந் தினால் கிடைக்குமாம்.

பார்லி (ஜவ்வரிசி):
 பார்லி அல்லது ஜவ்வரிசி என்றழைக்கப்படும் இதில் உடல் ஆரோக்கியத்தை பேணும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக இருதயத்திற்கு இது மிகவும் நல்லது.கொழுப்பை எதிர்த்துப் போராடுவதில் ஓட்ஸைவிட பார்லி அதிக திறன் வாய்ந்ததாம். ஓட்ஸைப் போன்றே பார் லியிலும் 'பீட்டா குளூகோன்' என்ற நார்ச்சத்து அடங்கியுள்ளது.மேலும் கல்லீரலுக்குத் தேவை யான வைட்டமின் 'டி'யும் இதில் உள்ளது.

நன்றி:விடுதலை மலர் 

No comments:

Post a Comment